கான்பூர்,ஜூன் 3- உத்தரப்பிரதேச மாநிலத்தில் ரவுடிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காவல்அதிகாரிகள் உட்பட 8 போலீசார் கொல்லப்பட்ட னர். இச்சம்பவம் போலீசார் மற்றும் மக்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், கான்பூர் மாவட்டம், சவுபேபூர் காவல் சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் பிக்ரு கிராமத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி விகாஸ் துபேவை கைது செய்ய போலீ சார் வியாழனன்று இரவு சென்றுள்ளனர். இவர் மீது 60-க்கும் மேற்பட்ட கொலை மற்றும் கொள்ளை வழக்குகள்உள்ளன. டிஎஸ்பி தேவேந்திர மிஸ்ரா, ஆய்வாளர் பில்ஹார், இரு துணை ஆய்வாளர்கள், 5 காவலர்கள் என சென்ற போலீஸ் குழுவினரை நோக்கி விகாஸ் துபேவின் ஆட்கள் ஒரு கட்டி டத்தின் மேலிருந்து துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இந்த தாக்கு தலில் டிஎஸ்பி தேவேந்திர மிஸ்ரா, ஆய்வாளர் பில்கார், இரு துணை ஆய்வாளர்கள் , 4 காவலர்கள் என 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 7 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள் ஆய்வுசெய்துவருகின்றனர்.